samedi 1 mai 2010


நடைமுறை சாத்தியமான வழிமுறையில் உரிமைகளை வென்றெடுக்க டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

தமிழ் பேசும் மக்கள் இழந்துபோன உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நடைமுறை சாத்தியமான வழிமுறையில் அணி திரளவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இழப்புக்களை சந்தித்து,தியாகங்களை செய்த நிலையில்,உரிமைக்கான போராட்டம் என்பது அழிவு யுத்தமாக மாறியது.

இச்சந்தர்ப்பத்தில் தான் இலங்கை,இந்திய ஒப்பந்தம் வழங்கிய அரியதோர் சந்தர்ப்பத்தின் மூலம் நாம் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஜனநாயக வழிமுறைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை, 01 மே 2010 22:10

Aucun commentaire: