vendredi 30 avril 2010

நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரிக்கப்பட்டதேன்?
நடைபெற்று முடிந்த 2010 ஆம் ஆண்டுக்கான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடைமுறைகளில் செல்லுபடியான வாக்குகளுக்குச் சரிபாதியாக நிராகரிக்கப்பட்டவையும் இருந்தன.

இம்முறை தேர்தலில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்டவை 52 வீதமான வாக்குகள். இவற்றுக்குக் காரணம் கட்சிகள் , கட்சி ஆதரவாளர்கள் , சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றுக்கிடையில் ஏற்பட்ட தகராறுகளும், உட்பூசல்களும், அடுத்தடுத்து இடம்பெற்ற ஜனாதிபதி - நாடாளுமன்ற தேர்தல்களும் தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அளிக்கப்பட்ட மொத்த 52 வீதமான வாக்குகளில், செல்லுபடியானவையும் நிராகரிக்கப்பட்டவையும் சரி சமமாகவே இருந்தன. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் நிராகரிக்கப்பட்டவை 596,972.

அநுராதபுரம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 457,137 - நிராகரிக்கப்பட்டவை 37,236 0. பொலநறுவை மாவட்டம் அளிக்கப்பட்டவை 186,269 - நிராகரிக்கப்பட்டவை 14,798. நுவரெலியா மாவட்டம் அளிக்கப்பட்டவை 303,470 - நிராகரிக்கப்பட்டவை 37.236. யாழ்ப்பாணம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 168,277 - நிராகரிக்கப்பட்டவை 19,774.

மட்டக்களப்பு மாவட்டம் அளிக்கப்பட்டவை 195,367 - நிராகரிக்கப்பட்டவை 14,749. வன்னி மாவட்டம் அளிக்கப்பட்டவை 117,185 - நிராகரிக்கப்பட்டவை 10,208. கேகாலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 388,420 - நிராகரிக்கப்பட்டவை 25,965. களுத்துறை மாவட்டம் அளிக்கப்பட்டவை 544,606 - நிராகரிக்கப்பட்டவை 51,751. பதுளை மாவட்டம் அளிக்கப்பட்டவை 387,847 - நிராகரிக்கப்பட்டவை 24,169. புத்தளம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 280,354 - நிராகரிக்கப்பட்டவை 21,562.

அம்பாந்தோட்டை மாவட்டம் அளிக்கப்பட்டவை 289,294 - நிராகரிக்கப்பட்டவை 11,240. கம்பஹா மாவட்டம் அளிக்கப்பட்டவை 980,467 - நிராகரிக்கப்பட்டவை 50,234. குருநாகல் மாவட்டம் அளிக்கப்பட்டவை 725,566 - நிராகரிக்கப்பட்டவை 53,130. மாத்தறை மாவட்டம் அளிக்கப்பட்டவை 341,871 - நிராகரிக்கப்பட்டவை 14,289.

மொனராகலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 169,640 - நிராகரிக்கப்பட்டவை 10,491. இரத்தினபுரி மாவட்டம் அளிக்கப்பட்டவை 480,395 நிராகரிக்கப்பட்டவை 37,022. திகாமடுல்லை மாவட்டம் அளிக்கப்பட்டவை - 272,462 நிராகரிக்கப்பட்டவை 15,516. கொழும்பு மாவட்டம் அளிக்கப்பட்டவை 989,729 - நிராகரிக்கப்பட்டவை 50,354. காலி மாவட்டம் அளிக்கப்பட்டவை 485,401- நிராகரிக்கப்பட்டவை 24,013.

மாத்தளை மாவட்டம் அளிக்கப்பட்டவை 215,060 - நிராகரிக்கப்பட்டவை 19,310. கண்டி மாவட்டம் அளிக்கப்பட்டவை 599,226 - நிராகரிக்கப்பட்டவை 58,333. திருகோணமலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 43,454 - நிராகரிக்கப்பட்டவை 3,483.

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் அதிகரிப்புக்குக் காரணம் மக்கள் மத்தியில் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் விழிப்புணர்வின்மை எனக் கூறலாம். ஒவ்வொரு தேர்தல் நடவடிக்கையின் போதும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கஃபே போன்ற அமைப்புக்களும் வாக்களிக்கும் முறை தொடர்பில் முன்கூட்டிய அறிவுரைகள் வழங்கி வருவது இயல்பு. எனினும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மேற்படி அறிவுறுத்தல்கள் எந்தளவுக்கு இருந்தன என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

சுமார் 2 கோடி மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற நாடளாவிய ரீதியில் எத்தனை அரசியல் கட்சிகள்? எத்தனை சுயேச்சைக் குழுக்கள்?

இம்முறை வாக்குச்சீட்டுக்களில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் பெயர், சின்னம், வாக்குப் பட்டியல் என்பனவற்றுடன் வழமைக்கு மாறாக, புள்ளடியிடுவதற்குப் பென்சிலுக்குப் பதில் பேனா மற்றும் மை பூசப்பட்ட கை விரலில் மாற்றம் - இப்படிப் பல மாற்றங்கள். இவற்றையும் வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்குக் காரணங்களாகக் கொள்ளலாம்.

இனிவரும் காலங்களிலாவது, வாக்களிப்பு நடவடிக்கைகளின் போது தேர்தல் திணைக்களம் அவதானமாகச் செயற்பட வேண்டும். இல்லையேல் நிராகரிக்கப்படும் வாக்குகள் மேலும் அதிகரிக்குமேயல்லாது குறைவடையாது என்பது திண்ணம்.

பௌத்த கொடி உருவாக்கப்பட்டு இன்றுடன் 125 வருடங்கள் நிறைவு
இலங்கையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு இன்றுடன் 125 வருடங்கள் நிறைவடைகின்றன.

பௌத்தர்கள் புனித நாளாகக் கருதும் போயா தினத்தை விடுமுறையாக அறிவிக்குமாறு 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இலங்கையிலுள்ள பௌத்த குழுவொன்று கோரிக்கை விடுத்திருந்தது. பிற்காலத்தில் அந்தக் குழுவுக்கு ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கள தேரர் தலைமை வகித்தார்.

அதன்பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்கள் போயா தினத்தை விடுமுறை தினமாக்குவதற்கு அனுமதியளித்தனர். அதன் பின்னர் 1885 ஆம் ஆண்டு பௌத்த கொடி உருவாக்கப்பட்டது.

அக்காலப்பகுதியில் ஜே.ஆர்.டி. சில்வா, கேர்ணல் ஹென்றி எஸ். ஒல்கோட் ஆகியோரின் சிந்தனைகளின் கீழ் பௌத்த கொடி வடிவமைக்கப்பட்டது.

ஆறு வர்ணங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்ட பௌத்த கொடியினை பின்னர் 1889 ஆம் ஆண்டு ஜப்பன், பர்மா உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனைக்கமைய அநாகரிக தர்ம பால, ஒல்கோட் இருவரும் இணைந்து 5 வர்ணங்களில் மாற்றியமைத்தனர். நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, ஒரேஞ் ஆகிய வர்ணங்களை உள்ளடக்கியதாக பௌத்த கொடி உருவாக்கப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட பௌத்த கொடி, கொட்டாஞ்சேனை தீபதுத்தமாராம பௌத்த விகாரையில் வைத்து முதன் முதலாக இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டது.

பௌத்த கொடி 1885 ஆம் ஆண்டு இலங்கையின் பௌத்த மதம் சார்ந்து உருவாக்கப்பட்டது. உலக பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் ஒன்று கூடிய பௌத்த மத சம்மேளனத்தின் மாநாட்டின் போது, அதன் தலைவரும் பேராசிரியருமான ஜீ.பி. மலலசேகர, 1952 மே 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் பௌத்த மத கொடிக்கு அங்கீகாரம் வழங்கினார்.

முதலாவது நீல வர்ணம் - பிரபஞ்ச ஒற்றுமை
இரண்டாவது மஞ்சள் - நடு நிலைமை
மூன்றாவது சிவப்பு - ஆசிர்வாதம்
நான்காவது வெள்ளை - புனிதம்
ஐந்தாவது ஓரேஞ் - புரிந்துணர்வு

இதுவே உலகில் பௌத்த மத கொடியின் ஒருங்கிணைந்த கோட்பாடாகும்.







HSZs - from 1951 till today

The pruning of the High Security Zones (HSZs) in the North is something that was expected ever since the wiping out of the LTTE.

So when it was announced yesterday that the troops would be withdrawn from private property which formed part of the HSZs it did not come as a surprise.

However what should not be forgotten is that while the zoning of the areas was done in the 1980s with the rise of the LTTE, the security mechanism, which included camps and deployment of troops in strategic places in the North and the East, was started some 60 years ago.

The bulk of the camps in the North and the East came into being under what was called Operation Monty (Named after Major Montague Jayawickrama) launched in 1951 by the government.

These camps were established taking the issue of ‘internal security’ and the need to counter “external aggression” into consideration.

Among the key purposes of the move was minimizing material and human smuggling which was rampant between Sri Lanka and India at that time.

The first camp to open in the North was one in Mannar soon to be followed by similar establishments in Pooneryn, Palaly, Elephant Pass, Thalladi, Karainagar and Mullaitivu and later in other areas in the Eastern province as well.

While the respective governments increased the deployment of troops over the years, in 1980 with the security situation beginning to deteriorate the J.R. Jayewardene government introduced what was called the ‘Defence Stations Act” to arrest the situation. The purpose of the Act was to “make provisions for the establishment of Boards of Control for the administration and development of areas in or in the vicinity of which defence establishments are situated.”

In short to streamline the administration work of the areas in the vicinity of military establishments.

For some reason a few years after the concept of Defence Stations got off the ground the Act, was suspended.

What led to the amalgamation of camps to form zones was the intensification of the LTTE attacks and the tactics used by the LTTE during the ceasefires to encroach the territory of the Army.

On the other hand there were regular attacks on air force flights and helicopters while landing and taking off from Palaly as the LTTE was using adjoining civilian areas to launch attacks.

Strategic reasons therefore contributed to the urgency to link up the camps by amalgamating them into zones and the acquisition of land was done after due gazette notification.

The rest is history.

The war is over. Still a sovereign state’s security concerns remain.

பாட்டாளி வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு

உலக நாடுகள் எங்கும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகி றது. பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டு மென்பதே இன்றைய மே தினத்தின் தொனிப்பொருள் ஆகும்.

உலக நாடுகளை எடுத்துக் கொள்வோமானால் அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளும் இன்றுவரை முற்றுமுழுதாக நிறைவேற்றப்படவில்லை. உலகத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இப்போதும் கூட அல்லலுறுகின்றனர்.

குறைந்த வேதனம், கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுதல், விடுமுறை மறுப்பு, ஓய்வூதியமின்மை போன்ற பல்வேறு அடிப்படை மீறல்களுக்கு மத்தியில் உலகில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அதேசமயம் பெரும்பாலான தொழிலாளர்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தொழிலுக்குரிய உத்தரவாதத்துடன் கடமையாற்றுகின்ற னர். பொதுவாக நோக்கும் பட்சத்தில் உலகத் தொழிலாளர்கள் தற்போது அடிப்படை உரிமைகளுடன் பணிபுரிந்து வருகின்றன ரென்றே கூற வேண்டும். தொழிலாளர்களுக்கான உரிமை எவ்வாறு கிட்டிய தென்ற வரலாற்றை சற்று புரட்டிப் பார்ப்பது இங்கு பொருத்தமானதாகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முந்திய காலப் பகுதியை எடுத்துக் கொள்வோ மானால் தொழிலாளர்கள் அன்றெல்லாம் உரிமைகளைப் பெற்றிருக்க வில்லை. அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டனர். தினமும் பதினான்கு மணி நேரம் வரை தொழில் செய்ய வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இதுபோன்ற அடக்குமுறைகளையெல்லாம் தகர்த்தெறிய வேண்டு மென்ற உத்வேகத்தில் 1886ம் ஆண்டு சிக்காகோ நகரில் சுமார் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்கள் ஒன்றுகூடி தொழிலாளர் உரிமை இயக்கத்தைத் தொடங்கினர்.

இக்காலப் பகுதியில் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் முதலாளி வர்க்கத்தினர் தங்களது பண பலத்துடன் செல்வாக்கைப் பயன்படுத்தினர். முதலாளிமாருக்குச் சார்பாக சிக்காகோவில் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலைக் கண்டித்து தொழிலாளர் அமைப்பினர் ஏற்பாடு செய்த கண்டனக் கூட்டமொன்றின் மீதும் தேசியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அங்கும் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

தொழிலாளர் மீதான அடக்குமுறைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தொழிலாளர் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஒருசிலர் தூக்கிலிடப் படும் பரிதாபமும் ஏற்பட்டது.

ஆனாலும் பாட்டாளி மக்கள் சளைத்து விடவில்லை. அவர்களது தொடர்ச்சியான போராட்டம் வெற்றியடைந்தது. தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும் இயக்கமும் வலிமை பெற்றன. தொழிலாளர் கள் தினமும் எட்டு மணி நேரமே வேலை செய்ய வேண்டுமென்ற உரிமை கிடைத்தது. பாட்டாளி வர்க்கத்தினருக்கு ஏனைய உரிமை களும் கிடைப்பதற்கு அன்றைய போராட்டமே வழியேற்படுத்தியது.

சிக்காகோ போராட்டத்திலிருந்து இன்றுவரையான காலப் பகுதியில் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகளும் சலுகைகளும் படிப்படியாகக் கிடைத்து வந்துள்ளன. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் எமது நாடும் முக்கியமானது.

அரசாங்க திணைக்களங்களில் மாத்திர மன்றி அரச சார்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமை புரியும் தொழிலாளரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் வலுவான சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் உள்ளன.

அதேசமயம் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் அலட்சியமாகச் செயற்பட்டு வருவதனால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் இங்கே குறிப்பிடுவது அவசியம்.

தனியார் நிறுவனங்கள் பலவற்றில் எராளமான தொழிலாளர்கள் நிரந்தரமற்றபடி பணிபுரிந்து வருகின்றனர். நினைத்த மாத்திரத்தில் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். இதுதவிர இத்தொழிலாளர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதி தொழில் வழங்குநர்களால் செலுத்தப்படுவதில்லை. மேற்படி தொழிலாளர்கள் ஓய்வு பெறும் காலப் பகுதியில் வெறுங்கையுடனேயே வீடு செல்ல வேண்டியேற்படுகிறது.

தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகின்ற மற்றொரு இடம் மலையகப் பெருந்தோட்டங்களாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற துன்பங்கள் தொடர்பாக ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வருகின்றன. அம்மக்களின் துன்பங் களைக் களைவதற்கு அரசாங்கம் பலவிதமான திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது.

உலகத் தொழிலாளர் தினமான இன்றைய நாளில் பாட்டாளி வர்க்கம் அனுபவித்து வரும் உரிமைகளை நாமெல்லாம் நினைவு கூருகிறோம். அதேசமயம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அல்லலுறும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இன்றைய மேதினத்தில் கவனத்தில் கொள்வது முக்கியம்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை

புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப் பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும்.

நாடு கடந்த தமிbழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.

புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலைய மைப்பை முறியடித்து இல்லாதொழி ப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும், இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும், இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார்.

இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.

சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது.

இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்ட நேற்றைய விழாவில் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, அவரது பாரியார் மஞ்சுளிகா ஜயசூரிய, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப்படை தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க, யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க, வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, மேஜர் ஜெனரல் சாகி கால்லகே உட்பட வன்னி படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட படைப்பிரிவுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






















தனது மோசடிகளை மறைப்பதற்காக பிறர் மீது சேறுபூசும் உதயன் சரவணபவன்!
தனது மோசடிகள் அம்பலத்திற்கு வருவதைத் தடுப்பதற்காகவும் அவை பற்றிய மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் உதயன் சரவணபவன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார்.

உதயன் பத்திரிகையின் நிர்வாகியான ஈ. சரவணபவன் அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஒரு பக்க சார்பாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த அந்தப் பத்திரிகை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுப் பத்திரிகையாக செயற்பட்டு வருவதையே அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த காலங்களில் பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரித்து அதன் பின்னால் மறைந்து கொண்டிருந்ததால் செய்வதறியாது இருந்த மக்கள் சரவணபவன் அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவானதும் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பி தற்போது அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் எங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு உதவிகளை நாடி வருகின்றனர். இதனை அறிந்த சரவணபவன் கையாலாகத நிலையில் அதனை மறைப்பதற்காக எமது கட்சி மீது தொடர்ந்து சேறடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

1985 களின் நடுப்பகுதியில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பிய சரவணபவன் அவர்கள் ஷப்றா (ஷப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டட்) என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார். இந் நிதிக்கம்பனியினர் மக்களின் பணத்தை கவர்ந்திழுக்க மக்களை மயக்கும் விளம்பரங்களை மிகவும் கபடத்தனமாக மேற்கொண்டனர். மக்களை ஏமாற்றி பணம்பறிக்க கவர்ச்சிகரமான வட்டிகளை அறிவித்து மக்களைக் கவர்ந்திழுத்தனர். ஏராளமான மக்கள் பெருந் தொகைப்பணத்தை அதாவது ஒவ்வொரு நபரும் பல லட்சம் ரூபாவை ஒரு தமிழனின் வங்கி என நம்பி வைப்பிலிட்டனர். பல ஓய்வு பெற்ற அரசதுறை மற்றும் தனியார்த்துறை ஊழியர்கள் தமது ஓய்வூதியப்பணம் முழுவதையும் நம்பிக்கையுடன் வைப்பிலிட்டனர். பல பெண்கள் தாம் தமது எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமாக சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தையும் அதிக வட்டிகளை பெற்று மேலும் பணம் சேமிக்கலாம் என்ற கற்பனையில் சப்றா நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டனர். வேண்டியளவு பணம் மக்களால் வைப்பில் இடப்பட்ட பின்னர் திடீரென சப்றா நிதிநிறுவனம் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போனது. ஏழைத் தமிழ் மக்களின் பணமான சுமார் 60 கோடி ரூபா பணம் முழுவதையும் சரவணபவன் சுருட்டிக் கொண்டார். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சம்பாதித்த பணம் முழுவதும் சூறையாடப்பட்டது. தமது வாழ்வாதாரமாக வைத்திருந்த பல லட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டிருந்த பல பெண்களின் வாழ்க்கையில் மண் விழுந்தது. அப்பெண்களில் பலர் திருமணம் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு இன்னமும் வாழ்க்கையில் விரக்தியுற்று யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். பலர் பல லட்சம் ரூபா பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை கூட செய்திருந்தார்கள்.

இவ்வாறு பல கோடி ரூபாக்களை இழந்த மக்கள் தற்போது சரவணபவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அதாவது அவர் வெளியுலக வாழ்க்கையில் காலடிவைத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போல் பயங்கரவாத அசாதாரண சூழ்நிலை இல்லாத ஒரு ஜனாநாயக சூழ்நிலை தற்போது தோன்றியிருக்கும் நிலையில் அவரிடமிருந்து தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இழந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக திரண்டுவருவதையும் அதற்கு உதவுமாறு எமது கட்சியிடம் கோரிக்கை முன்வைப்பதையும் அறிந்து கொண்டுள்ள சரணவனபவன் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை மழுங்கடிக்கச் செய்வதற்காகவும் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் எமது கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகின்றார்.

ஒருபக்கம் தனது மோசடியை மறைப்பதற்கும் மறுபுறத்தில் தான் சார்ந்த அரசியல் கட்சியில் தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்திக்கொள்வதற்காகவும் எம்மீது சேறடிக்கும் நடவடிக்கையை உதயன் பத்திரிகை மூலம் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றார்.

ஒருகாலத்தில் தமிழரசுக்கட்சியின் உத்தியோகப+ர்வ பத்திரிகையாக இருந்த சுதந்திரன் பத்திரிகை கூட தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டதில்லை. ஆனால் இன்று உதயன் பத்திரிகை எந்தவித பத்திரிகை தர்மமும் அற்றவகையில் தனது உரிமையாளர் சரவணபவனின் மோசடிகளை மறைப்பதற்காக எமது கட்சி மீது உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டு தொடர்ந்து எம்மீது சேறுபூச முயற்சித்து வருகிறது என்பதை எமது மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சில பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் தங்கநகைகள் களவாடப்பட்டன. சில பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் நவாலியில் வைத்து 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் அவன் கூக்குரலிட்டதால் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளான். அச்சிறுவன் கூறிய தகவல்கள் அச்சமூட்டுவதாகவுள்ளன.

தன்னைக் கடத்தியவர்கள் தனக்கு ஏதோ மருந்தை பருக்க முற்பட்டதாகவும், ஊசியேற்ற முற்பட்டதாகவும் அவன் தெரிவித்ததோடு. அவ்வாகனத்தில் இன்னொரு சிறுவன் மயக்க நிலையில் இருந்நதாகவும் அவன் தெரிவித்துள்ளான். கடந்த 11ம் திகதி ஓட்டுமடம் பகுதியில் கணனி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாவணவன் ஒருவனை கடத்த முற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே நாள் அராலியில் வைத்து 5ம் தரம் கல்வி பயிலும் மாணவியொருத்தியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. இவை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதனைத்தொடாந்து மூளாய் பகுதியில் வைத்து சிறுவன் ஒருவன் மீது மயக்க மருந்தை தெளித்து கடத்த முயன்ற சம்பவமும். சங்கனையில் சிறுமியொருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் குறித்த செய்திகள் யாழ். குடாநாட்டு செய்திப் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. இக்கடத்தல்களோடு தொடர்புடைய சிலர் பிடிபட்டுள்ள போதும் கடத்தல்கள் தொடர்ந்தவாறேயுள்ளன.

கடந்த 25ம் திகதி வடமராட்சி நெல்லிலடியைச் சோந்த 24 வயதுடைய யுவதியொருவர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். பின்னர் இவரது நகைகள் யாவும் கடத்தயவர்களால் பறிக்கப்பட்டு அவரைக் கொலை செய்யும் நோக்கில் அவரின் கழுத்தை நெரித்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும,; துன்னாலைப் பகுதியிலுள்ள பற்றையொன்றிற்குள் அவரை தள்ளியெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் பொதுமக்களின் உதவியுடன் மீட்க்கபட்ட இப்பெண் மந்திகை மருத்துவமனையில் சோக்கப்பட்டார். இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீடொன்றிலிருந்து அந்த யுவதியின் சைக்கிள். நகைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடத்தல்கள் குடாநாட்டில் தொடர்ந்த வண்ணமுள்ளதால் மக்கள் பிதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அவர்களுடனேயே தினமும் பாடசாலைகளுக்கு வந்து செல்லும் நிலை எற்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவுகள், கொலைகளுக்குப் பின்னால் தமிழர்களே இருந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர். இச்சம்பவங்கள் திட்;டமிடப்பட்ட அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் பாதாள உலகக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கைகள் பார்க்கப்படுகிற்னது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் சில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதணை நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக யாழில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நடவடிக்கை மீண்டும் யாழ்பாணம் இராணுவ பொலிஸ் கெடுபிடிகளுக்கு உள்ளாகும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீடுகளில் களவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க குடாநாட்டில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் தமக்கு வரவில்லை எனவும், யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார்.








மகேஸ்வரி நிதியத்தை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் !

மகேஸ்வரி நிதியமானது, இலங்கை பாராளுமன்றத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்டு, அங்கவீனமுறற்ற ஆட்களுக்கான தேசிய சபையினாலும் சட்டபூர்வ நிறுவனமாக அங்கீகாரம் பெற்ற, அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவி செய்யும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். இது, ஏழை எழிய மக்கள் சிறிது சிறிதாக சேமித்த பணத்தையும், ஓய்வூதியர்கள் தமது இறுதிகாலத்திற்கென ஒதுக்கிவைத்த தொகையையும், எம்மிடம் சேமிப்பில் இடுங்கள் என ஏமாற்றிப்பெற்று, முழுத்தொகையையும் ஏப்பமிடும் எண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு தனியார் மோசடி நிதி நிறுவனம் அல்ல. மகேஸ்வரி நிதியம் நேர்மையான ஒரு தொண்டு நிறுவனம் என்பதை அது செய்யும் பொது தொண்டுகள் நிரூபித்து வருகின்றன்.

இந்நிலையில், மகேஸ்வரி நிதியத்தை முடக்கும் முயற்சியொன்றை ‘உதயன்’, ‘சுடரொளி’ பத்திரிகை நிறுவன இயக்குனரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான திரு சரவணபவான் அவர்கள் தொடங்கியுள்ளதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

கேள்விக்குரிய நடத்தையுள்ள, சப்றா நிதி நிறுவனத்தின் இந்த முன்னாள் முகாமையாளரின் சேறடிக்கும் இம் முயற்சிகளாலும், இவரின் ஆதாரமற்ற அவதூறுகளாலும் எமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட மானநட்டத்திற்கு நாம் முறைப்படி நீதிமன்றில் முறையிட உள்ளோம். எனினும், பொதுமக்கள் நலனில் அக்கறையுள்ளவன் என்ற பொய்யான தோற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக பொறுப்பற்ற முறையில் வெளிவிடப்படும் இன்னாரின் பத்திரிகை அறிக்கைகளால் பொதுமக்கள் மத்தியில் எமது நிறுவனத்திற்குள்ள நற்பெயருக்கு ஏற்படவிருக்கும் களங்கத்தை களைவதற்காக நாம் சில விடயங்களை பொதுமக்களுக்கு தெளிவாக்க விரும்கிறோம்.

மகேஸ்வரி நிதியமானது, சட்டபூர்வமான, சுதந்திரமான ஓரு தொண்டு நிறுவனமாகும். அத்துடன் அது ஆயுதத்தடன் அரசியல் செய்யும் ஒரு குழுவுமல்ல. இது இதுவரையில் செய்த அபிவிருத்தி முயற்சிகளுக்கான உதவிகள் அனைத்தும் பத்திரிகை வாயிலாகவும் பொதுமக்களின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டவை. இந் நிறுவனமானது தனது தொண்டுகளை புரிவதற்கு உரிய நிதியினை நன்கொடைகள் மூலமும், நிதியீட்டும் வழிமுறைகள் வழியிலும் சட்டபூர்வமாகவே பெற்றுக்கொள்கிறது. மணல் விற்பனை செய்யும் உரிமமும், அதன் மூலம் வரும் வருவாயும் இச் சட்டபூர்வ வகையிலேயே பெறப்பட்டது. மணல் விற்பனை செயற்பாடுகள் மகேஸ்வரி நிதியத்தினால் சுதந்திரமாகவே செயற்படுத்தப்படுகிறது என்பதுடன் உதயன் பத்திரிகையில் வெளிவந்த அவதூறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப்போல எந்தவொரு அரசியற் கட்சியும் எமது நிறுவனத்தின் பெயரில் ஒழிந்துகொண்டு மணல் விநியோகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை. இத்துடன் மணல் விநியோகம் மூலம் மகேஸ்வரி நிதியத்திற்குவரும் பணம், அதில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தைத் தவிர்த்து, பொது வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மணல் விநியோகத்தில் தற்போது ஏற்பட்டுவரும் கால தாமதமும், இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் கஸ்டங்களும் எமக்கும் மிகுந்த கவலையளிப்பனவாகும். இதற்கு, கட்டிட நிர்மாணப் பணிகள் வட பகுதியில் பெருகிவருவது பிரதானமான ஒரு காரணமாகும். முன்னர் யாழ். செயலகத்தினால் மணல் அனுமதி வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, யாழ்ப்பாணத்தில் கட்டிட நிர்மாணப்பணிகள் இதுபோல பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்து, யாழ்ப்பாணம் இயல்புநிலைக்குத் திரும்பி, கட்டிட நிர்மாண வேலைகள் அதிகளவில் அதிகரிக்கத்தொடங்கியபொழுது, புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகமானது யாழ்பபாணத்தில் தமது அலுவலகமொன்றை திறந்து சுற்றுச் சூழலினை ஆராய்ச்சி செய்து, எப் பிரதேசத்தில் மணல் அகழ முடியும் எனவும் எவ்வாறான ஒழுங்கமைப்பில் மண் அகழப்பட வேண்டுமெனவும் கணிப்பீடு செய்து மணலினை அகழ்வதற்கு அனுமதி வழங்கும் பொறுப்பினை எடுத்துக்கொண்டது. இதனால் கிராம அலுவலர்இ பிரதேச செயலர் என்பவர்களின் அனுமதியுடன் புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகத்திலும் அனுமதி பெற்றபின்னரே பாரவூர்திகளிடம் அனுமதி பத்திரத்தினை வழங்குவதன் மூலம் பயனாளிகள் மணலினை பெற்றுக்கொள்ளும் நிலை நடைமுறையிலிருந்து வருகிறது. இந் நீண்ட நடைமுறை சட்டப்படியாக அமுலில் இருப்பதும், இலங்கை ராணுவத்தினர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான பாரவூர்திகளையே தினமும் மணல் ஏற்ற அனுமதிப்பதும், மணல் பெற்றுக்கொள்வதில் தற்போது பொது மக்கள் எதிர்நோக்கும் கால தாமதத்திற்கான இதர கராணங்களாகும்.

பயனாளியொருவர் பிரதேச செயலகத்தில் மணல்கொள்ள அனுமதி பெறும் பொழுது, எமது நிலையத்திற்குச் செல்லும் திகதியும் தொடரிலக்கமும் பிரதேச செயலகத்தினராலேயே குறிப்பிடப்படுகின்றது. இதற்கமைவாக தினமும் 100 பயனாளிகள் எமது நிதியத்திற்கு வருகை தரும் வகையில் பிரதேச செயலர்களினால் தொடரிலக்கம் வழங்கப்படுகிறது. இவர்களுடன் கட்டட ஒப்பந்ததாரர்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிற்கென தினமும் 20 பேருடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 120 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது, மணலின் தேவைகள் அதிகரித்துள்ள நிலைமையை கவனத்திலெடுத்து, நாம் கடந்த மாதம் சுமார் 150 பயனாளிகளுக்கு தினமும் அனுமதியினை அளித்திருந்தோம். ஆ+னால் புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம் ஆளணி பற்றாக்குறைவால் இவற்றுள் 85 அனுமதிகளுக்கே ஒப்புதல் வழங்கியிருந்தனர். இதனால், கடந்த மாதம் - தினமும் 65 அனுமதிப்பத்திரங்கள் என்றவகையில் - சுமார் 1500 அனுமதிப்பத்திரங்கள் எமது அலுவலகத்தில் தேங்கியிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் எமது தொடர்ந்த கோரிக்கைகளின் விளைவாக புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம் ஆளணியினை அதிகரித்து தினமும் சராசரியாக 130 பயனாளிகளுக்கு அனுமதியினை வழங்கத்தொடங்கியிருந்தது. ஆனால், தற்போது, தினமும் 175 பாரவூர்திகளே குடத்தனையிலிருந்து மணல் ஏற்றிவருவதற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டுவருவதால் பயனாளிகள் காலக்கிரமத்தில் மணல் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. ஒரு அனுமதிப்பத்திரத்தில் சராசரியாக 3 தடவைகள் மணல் ஏற்ற வேண்டி இருப்பதால், தினமும் பாரவூர்தி சங்கத்திற்கு நாம் வழங்கும் 130 பத்திரத்தின் மூலம் 390 தடவைகள் குடத்தனைக்கு வாகனங்கள் சென்று வர வேண்டியுள்ளது. ஆனால் 175 தடவைகளே பாரவூர்திகள் சென்று வர அனுமதி உள்ளதால், எம்மால் மணல்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட மிகுதிப் பத்திரங்கள் பாரவூர்தி சங்கத்தில் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது 700 இற்கு மேற்பட்ட அனுமதி வழங்கப்பட்ட பத்திரங்கள் பாரவூர்திகள் சங்கத்தில் தேங்கி கிடப்பதாக நாம் அறிகிறோம்.

இதனுடன், பாரவூர்திகள் உரிமையாளர்களின் ஒழு;கீனங்களாலும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. மணல் ஏற்றும் சேவையில் ஈடுபடுவதற்கென பாரவூர்திகள் சங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்ட சில வாகனங்கள், அனுமதிப்பத்திரங்கள் கிடைத்த பின்னர் வெளிமாவட்டங்களுக்கு வேறு வேலைகளுக்கேன சென்று நேரகாலத்தில் மணல்கொள்வனவு செய்ய தவறுவதாகவும், தமக்கு தேவையானவர்களுக்கு மணலினை வழங்குவதில் முன்னுரிமை அளிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்துடன், இவற்றினை சீர் செய்ய வேண்டிய பாரவூர்திகள் சங்க நிர்வாகிகள் சிலர், சில அரசியல் பின்னணிகள் மற்றும் வியாபார போட்டிகள் காரணமாக பல்வேறு குழப்பங்களை உண்டுபண்ணி மணல் ஏற்றுவதில் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் நாம் அறிகிறோம்.

மண் விநியோகத்தில் பொறுப்புடையவர்களாக மகேஸ்வரி நிதியம், புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம், யாழ், மாவட்ட பாரவூர்திகள் சங்கம், வடமராட்சி மணல் ஏற்றும் பாரவூர்தி உரிமையாளர் சங்கம், வடமராட்சி கிழக்கு மணல் ஏற்றும் உழவு இயந்திர சங்கம், மணல் ஏற்றும் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை இராணுவம் போன்ற பல தரப்புகள் பங்காளிகளாக உள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம். மேலே கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள பல்வேறு காரணங்களால் பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நாம் இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. குறுகிய அரசியல் லாபங்களுக்காக, பொறுப்பற்ற விதத்தில் கோமாளித்தனமான பத்திரிகை அறிக்கைளை பிரசுரிக்காமல், பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதே இவ்விடயத்தில் ஏற்படும் காலவிரயத்தை சீர்செய்யும் நடவடிக்கையாக அமையும்.

- மகேஸ்வரி நிதியம், யாழ்ப்பாணம